Thursday, October 25, 2007

உயிரின் உயிரே

உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியில் வழியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈரஅலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்தபின்பும் கனலின் மேலெரிந்தேன்
காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாள்
நேரங்கூட எதிரியாகிவிட
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட
அணைத்துக்கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின் உயிரே)

சுவாசம் இன்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நெருப்பிட வாபெண்ணே
நினைவு எங்கோ நீந்திச்செல்ல
கனவு வந்து கண்ணைக் கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வாபெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரைத் தேடும்
விலகிப் போகாதே தொலைந்து போவேனே நான் நான் நான்
(உயிரின் உயிரே)

இரவின்போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம் வாபெண்ணே
பாதம் எங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வாபெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ நீ நீ நீ
(உயிரின் உயிரே)

No comments: