Friday, August 31, 2007

நீ தூங்கும் நேரத்தில்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஓ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என்னுயிரே ஓ என்னுயிரே
பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய்ப்போகுமே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஓ ஆரிரோ

(நீ தூங்கும் நேரத்தில்.....

மடிமீது நீ இருந்தால் சுவர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ
நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ
ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாமன்றி வேறாரோ
நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓ

(நீ தூங்கும் நேரத்தில்....

கண்ணோடும் நெஞ்சோடும் உயிராலே உன்னை மூடிக்கொண்டேனே
கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
மதி பதிக்கும் மதிமுகமே உன்னொளி அலை தன்னில் நான் இருப்பேன்
எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீதான் நீதானே ஓ

(நீ தூங்கும் நேரத்தில்....

No comments: