பல்லவி 1:
இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?
ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்ன?
எரிந்து போன சாம்பலில் இருந்து
எழுந்து பறக்கும் ப்கொஎனி௯ போல
மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன?
நான் வழ்ந்தால் உனக்கென்ன?
உனக்கென்ன ? தம்பி உனக்கென்ன?
பல்லவி 1
உனக்கென்ன?...
இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?
ஏற்றிவிடவோ தந்தையும் இல்லை
ஏந்திக்கொள்ள தாய் மடி இல்லை
என்னை நானே சிகரத்தில் வைத்தேன்
அதனால் உனக்கென்ன?
தாயின் கருவில் வளரும் குழந்தை
ஏழாம் மாதம் இதயம் துடிக்கும்
ஐந்தே மாதத்தில் இதயம் துடித்தேன் அதனால் உனக்கென்ன?
இவன் கொண்ட நெருப்போ குறையவில்லை
நெருப்பென்றும் தலை கீழாய் எரிவதில்லை
மலைகளின் தலையோ குனிவதில்லை
மனமுள்ள மனிதன் அழிவதில்லை
நீயென்ன உருகும் பனிமலை நான் தானே எரிமலை எரிமலை
உனக்கென்ன ?... தம்பி உனக்கென்ன?
இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?
சர :2
ஹிட்லராக வாழ்வது கொடியது
புத்தனாக வாழ்வதும் கடிது
ஹிட்லர் புத்தன் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன
வெற்றி என்பது பட்டாம்பூச்சி மாற்றி மாற்றி மலர்களில் அமரும்
உனக்கு மட்டும் நிரந்தரம் என்று நினைத்தால் சரியல்ல
எனக்கொரு நண்பன் என்று அமைவதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை
எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு உனக்கொரு உனக்கொரு தகுதியில்லை
நீயென்ன உருகும் பனிமலை நான் தானே எரிமலை எரிமலை
உனக்கென்ன ?...
தம்பி உனக்கென்ன?
Friday, August 17, 2007
இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?
at
Friday, August 17, 2007
Posted by
A. kalidasan
Labels: ATTAKAASAM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment