Tuesday, August 21, 2007

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)

நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

ம் ஹ்ம் ம் ஹ்ம்

(வந்த நாள்)

No comments: